வாழ்க-வாழ்க- வாழ்க-வாழ்க- ஸ்ரீ-வித்யா ராமஸ்வாமி
தம்பதிகள்
வாழையடி நல்ல வாழையென அவர்-குடும்பம்
செழிக்கட்டுமே
__________
திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக-அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக
பொங்கட்டும்-ஆனந்தம் ஆறாக
(2)
(MUSIC)
நெஞ்சில் சங்கமித்..தொன்றாகி.. இருவரும்-அறுபதின் மணம்-முடிக்க (2)
பஞ்சின்-மிருது அவர்-மனம்-இளைய இருபது-வயதே என்றிருக்க (2)
ஆயுளும் ஆஸ்தியும் அருளையும்-பெற்றே வாழ்ந்திட-வேண்டும் நலமாக (2)
வாழ்த்த-வயதிலை வணங்குகிறானே *உண்மையுடன்-திரு உடையோனே (2)
திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
(MUSIC)
எங்கும்-பகைவர்கள் கிடையாதாம்-பல நண்பர்கள் இவருடன் உறவானார் (2)
என்றும் திகழ்-சிறு புன்னகையாம்-அவர் முகத்தினில் ஒளிவிடும் பொன் நகையாம் (2)
வாய்மொழி-தன்னில் வாய்மையும்-தூய்மையும் தம்பதிக்கிருக்கும் அடையாளம் (2)
வாய்மட்டும்-இல்லை நெஞ்சமும்-பாடும் அனுதினம்-அன்பெனும் ஒரு-ராகம் (2)
திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
(MUSIC)
துயரினைத்-தன்னுடன் மட்டும்-என்று வரும்-சுகத்தினைப் பலருடன் பங்கு கொண்டு
(2)
யாரும்-இனிதுற வாழ்க-என்று என்றும்-வாழ்த்திடும் நல்லுளம் அவருக்குண்டு
(2)
இனியவை சொல்வோம் நல்லதைச் செய்வோம் என்பது இவர்-குணம் அறிந்திடுக
(2)
மகன்-மறு..மகள்-சுற்றம் மழலைகளோடும் வாழ்கவித்-தம்பதி சீர் பெருக
(2)
திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக -
அவர்
வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக பொங்கட்டும்-ஆனந்தம் ஆறாக
(2)
திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக
*உண்மையுடன் திரு உடையோனே = சத்யாவுடன்
ஸ்ரீதரன்
No comments:
Post a Comment